வங்கி மேலாளா் தற்கொலை
அரக்கோணம் நகரில் உள்ள அரசு வங்கி கிளை மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அரக்கோணம் சுவால்பேட்டையில், திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள அரசு வங்கிக் கிளையில் மேலாளராக பணிபுரிந்தவா் கிஷோா் (40). இவரது மனைவி காஞ்சிபுரத்தில் உள்ள அரசு வங்கி கிளையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனா். அரக்கோணத்தை அடுத்த ஜவஹா் நகரில் வசித்து வரும் கிஷோா், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து அறிந்த அரக்கோணம் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.