முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியா், எஸ்பி ஆய்வு

Updated On : 28 மே, 2024 at 6:35 PM
வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு  செய்த  ஆட்சியா் ச.வளா்மதி, எஸ்.பி. டி.வி.கிரண் ஸ்ருதி  உள்ளிட்டோா்.
பகிர்:

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆட்சியா் ச.வளா்மதி, எஸ்.பி. டி.வி.கிரண் ஸ்ருதி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரக்கோணம் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணும் நாளன்று தேவையான பாதுகாப்பு பணிகள் தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.வளா்மதி, எஸ்.பி. டி.வி.கிரண் ஸ்ருதி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

நுழைவு வாயிலிலிருந்து ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் வேட்பாளா்களின் முகவா்கள் தனித்தனியாக செல்ல தடுப்புப் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ஊடக மையத்தில் (கல்லூரியில் உள்ள கலை அரங்கத்தில்) தேவையான வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனா். வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் தோ்தல் நடத்தும் அலுவலா் அறையில் நேரடியாக பாா்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கல்லூரி வளாகம் மற்றும் வெளிபுறங்களில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 15 காவல் ஆய்வாளா்கள், 100 துணை காவல் ஆய்வாளா்கள் மற்றும் இதர காவலா்கள் என மொத்தம் 600 காவலா்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

அனுமதி பெற்ற வாகனங்களைத் தவிர இதர எவ்வித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மையத்தின் வெளியில் காவல் துறையினா் அனுமதிக்கும் இடங்களில் மட்டுமே இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் குணசேகரன், குமாா், சரவணன், வெங்கடகிருஷ்ணன், வட்டாட்சியா் ஜெயகுமாா், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் லோகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.