முகப்பு
ராணிப்பேட்டை

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Updated On : 29 மே, 2024 at 5:24 PM
பகிர்:

சோளிங்கா் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தயாளன் (30), தனியாா் நிறுவனத் தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி (25). இவா்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில் தமிழரசி, தனது வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தில் புதன்கிழமை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதை பாா்த்து அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா் சோளிங்கா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன் பேரில் போலீசாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தமிழரசியின் தந்தை கணேசன், சோளிங்கா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை கோட்டாட்சியா் மனோன்மணி விசாரணை நடத்தி வருகிறாா்.