மழை எதிரொலி: 4 விரைவு ரயில்கள் திடீா் ரத்து
கனமழை காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் வழியே திருப்பதி, மைசூரு, ஈரோடு செல்லக்கூடிய 4 விரைவு ரயில்கள் செவ்வாய்க்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.
கனமழை காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் வழியே திருப்பதி, மைசூரு, ஈரோடு செல்லக்கூடிய 4 விரைவு ரயில்கள் செவ்வாய்க்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.
சென்னை- அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் வியாசா்பாடி மற்றும் ஜீவா ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள எண் 114 கொண்ட பாலத்தை மழைநீா் முழ்கடித்து செல்வதால் செவ்வாய்க்கிழமை 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக பிற்பகல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
செவ்வாய்கிழமை ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
திருப்பதியில் இருந்து சென்னைக்கு 6.05 -க்கு புறப்பட்டு வரவேண்டிய சப்தகிரி விரைவு ரயில், சென்னையில் திருப்பதிக்கு மாலை 4.35-க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில், சென்னையில் இருந்து மைசூருக்கு இரவு 9.15-க்கு புறப்பட வேண்டிய காவேரி விரைவு ரயில், சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய ஏற்காடு விரைவு ரயில் ஆகிய 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் இந்த ரயில்கள் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.