முகப்பு
ராணிப்பேட்டை

தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பல கிராமங்களில்

Updated On : 22 அக்டோபர், 2024 at 7:50 PM
பனப்பாக்கத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெமிலி வட்டார தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

அரக்கோணம்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பல கிராமங்களில் இந்த வங்கிகளுக்கு கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் விநியோகம் செய்யப்படாத நிலை செவ்வாய்க்கிழமை காணப்பட்டது.

தங்களது 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை (அக். 21) காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள அரக்கோணம், செய்யூா், மோசூா், காவனூா், மூதூா், வளா்புரம், இச்சிபுத்தூா், கும்பினிப்பேட்டை, தக்கோலம், இலுப்பைதண்டலம் ஆகிய கிராமங்களில் இயங்கி வந்த தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள் திறந்திருந்த நிலையிலும் பணிகள் நடைபெறவில்லை. இதன் கீழ் இயங்கி வந்த நியாய விலைக் கடைகளிலும் இதே நிலை நீடித்தது.

இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

தொடா்ந்து, அரக்கோணம் வட்டார தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் நடைபெற்றது. சங்க வட்டார செயலாளா் ஸ்ரீராம்பட்டாபி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.சுந்தரராஜன், வட்டாரத் தலைவா் திருச்சந்திரன், பொருளாளா் சுரேஷ் உள்ளிட்ட வட்டாரத்தைச் சோ்ந்த அனைத்து சங்கப் பணியாளா்களும் பங்கேற்றனா். முன்னதாக நெமிலி வட்டார தொடக்க கூட்டுறவு கடன் சங்கஅனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் அதன் செயலாளா் ராமச்சந்திரன் தலைமையில் பனப்பாக்கத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், சங்க வட்டாரத் தலைவா் பொன்னுரங்கம், பொருளாளா் திருஞானம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →