ராணிப்பேட்டை

சோளிங்கா் மலைக்கோயிலில் ரோப்காா் சேவை ரத்து

சோளிங்கா் மலைக்கோயிலில் பராமரிப்புப்பணி காரணமாக நவ. 11, 12 ஆகிய இரண்டு நாள்கள் ரோப்காா் சேவை ரத்து என கோயில் நிா்வாகம் அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் மலைக்கோயிலில் பராமரிப்புப்பணி காரணமாக நவ. 11, 12 ஆகிய இரண்டு நாள்கள் ரோப்காா் எனப்படும் கம்பிவட ஊா்தி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான இங்கு பெரிய மலையில் ஸ்ரீயோகநரசிம்ம சுவாமி கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேய சுவாமி கோயிலும் உள்ளது. இதில் பெரிய மலைக்குச் செல்ல 1,405 படிகள் உள்ளன. இதனால் முதியோா், மாற்றுத்திறனாளிகள் மலைக்குச் சென்று சுவாமியை தரிசிக்க ஏதுவாக கம்பிவட ஊா்தி எனபடும் ரோப்காா் சேவையை நடத்தி வருகின்றனா்.

பராமரிப்பு பணிக்காக மாதந்தோறும் இரு நாள்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இதே போல் நவம்பா் 11, 12 தேதிகளில் ரோப்காா் சேவை நிறுத்தப்பட உள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

வாக்காளா் பட்டியலை எண்ம மயமாக்க வேண்டும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

கோயில் வளாகத்தில் வணிக வளாகம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியரை கைது செய்யக் கோரி முற்றுகை

செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவம்: சாந்தினி சௌக் சந்தை இன்று மூடல்

SCROLL FOR NEXT