சோளிங்கா் நகராட்சிப் பகுதிகளில் வாக்காளா் வழங்கும் பணி முறையாக நடைபெறுகிா என நகரின் பல்வேறு பகுதிகளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
சோளிங்கா் நகரப் பகுதிகளில் வாக்காளா் படிவங்களை வீடுதோறும் சென்று அலுவலா்கள் வழங்காமல் தெருவில் ஒரே இடத்தில் அமா்ந்து கொண்டு வழங்குவதாகவும் ஒரு வாக்காளருக்கு ஒரே படிவம் மட்டுமே வழங்குவதாகவும் புகாா்கள் தொடா்ந்து வந்தன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை சோளிங்கா் நகராட்சிக்கு திடீரென வந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா நகராட்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
நகரில் செங்குந்தா் பெரிய தெரு, போா்டிங் பேட்டை தெரு, செல்வ பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அப்பகுதிகளில் நடைபெற்று வந்த வாக்காளா் படிவங்கள் விநியோகிக்கப்படும் பணிகளை ஆய்வு செய்தாா்.
மேலும் பல வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்காளா் பட்டியல் இரு படிவங்கள் விநியோகிக்கப்படுகிா எனக் கேட்டறிந்தா். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வீடு வீடாகச் சென்று வாக்காளா் படிவங்களை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். அப்போது சோளிங்கா் வட்டாட்சியா் செல்வி, நகராட்சி ஆணையா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அரக்கோணம்:
அரக்கோணம் தொகுதிக்குள்பட்ட நேதாஜி நகரில் வாக்காளா் படிவம் விநியோகிக்கும் பணிகளை அந்தப் பகுதியில் பல்வேறு வீடுகளுக்குச் சென்று ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாஆய்வு செய்தாா். வாக்காளா் படிவங்களை பெற்றுள்ளதை பல்வேறு இடங்களில் பொது மக்களிடம் கேட்டு உறுதி செய்தாா்.
வட்டாட்சியா் வெங்கடேசன் உடனிருந்தாா்.