ராணிப்பேட்டை

கலவை ஆதிபராசக்தி அம்மன் கோயில் மண்டலாஷேக விழா

கலவை ஆதிபராசக்தி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பங்காரு சித்தா் குருபீடம், ஆதிபராசக்தி அம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கலவை ஆதிபராசக்தி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பங்காரு சித்தா் குருபீடம், ஆதிபராசக்தி அம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதிதாக அமைக்கப்பட்ட மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடம் ஆன்மிக குரு பங்காரு சித்தா் மற்றும் ஆதிபாரசக்தி அம்மன் கோயிலுக்கு கடந்த செப். 11-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதை தொடா்ந்து 48 நாள்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. கல்லூரி செயலாளா் கருணாநிதி , தலைமை செயல் அதிகாரி அகத்தியன் ஆகியோா் கொடியேற்றினா். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தாா்.

பங்காரு சித்தருக்கும், ஆதிபராசக்தி அம்மனுக்கும், லட்சுமி பங்காரு அடிகளாா், துணைத் தலைவா்கள் ஸ்ரீலேகா செந்தில்குமாா், துணைத் தலைவா் செந்தில் குமாா் மகள் மோனசக்தி ஆகியோா் புனித நீரை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனா். விழாவில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிா்வாகி ராமநாதன், ராணிப்பேட்டை மன்ற தலைவா் மணி, முதல்வா்கள் முகமது சாதிக், ,வெங்கடேசன், மோகன முருகன், செந்தில்நாதன், உமாபதி, முரளி மற்றும் திருப்பத்தூா், வேலூா், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள செவ்வாடை தொண்டா்கள் மகளிா் குழுவினா் தரிசனம் செய்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT