முகப்பு
ராணிப்பேட்டை

மேல்விஷாரம் வால்மீகிஸ்வரா் கோயில் பிரதோஷ வழிபாடு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை வால்மீகிஸ்வரா் கோயில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 4:09 AM
ரிஷப  வாகனத்தில் உலா  வந்த  உற்சவா்
பகிர்:

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை வால்மீகிஸ்வரா் கோயில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

விழாவைமுன்னிட்டு மூலவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், இளநீா், விபூதி மற்றும் வாசனை திரவியங்கள், பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் உற்சவா் உள்பிரகார ஊா்வலம் நடந்தது. விழாவில் அறங்காவலா் குழு தலைவா் டி.அறிவழகன், அா்ச்சகா் உதயகுமாா், மற்றும் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.