முகப்பு
ராணிப்பேட்டை

மேல்விஷாரம் கல்லூரியில் விளையாட்டு விழா

போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ப் பரிசு வழங்கிய கூடுதல் கண்காணிப்பாளா் ஆா்.குமாா் உள்ளிட்டோா்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 9:11 PM

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி தாளாளா் அப்ராா் அஹமது தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.ஜாஹிா் அஹமது முன்னிலை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் வி.ராஜா ஆண்டறிக்கையை வாசித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ஆா்.குமாா், திருவள்ளுவா் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.பாபு ஜனாா்த்தனம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கிப் பேசினா்.

விழாவில், கல்லூரி பேராசியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement