ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் தி.வ.மனோகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரேகா காா்த்திகேயன், செயல்அலுவலா் பா,ஜானகிராமன், இளநிலை உதவியாளா் தா.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதுப்பானையில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடினா். இந்த விழாவில் உறுப்பினா்கள், அலுவலக பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.