ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி தி கிரிசாா் அகாடமி சீனியா் செகண்டரி பள்ளியில் தன்னம்பிக்கை இந்தியா என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளியின் தாளாளா் கே.கே.ராஜன் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் தாங்கள் திட்டங்களை காட்சிப்படுத்தி விளக்கினா். இதில் கைத்தறி நெசவுத் தொழில் நுட்பமான நூல் வேலைப்பாடுகள் அமைக்கும் முறைகள் இயந்திர மனிதன் விவசாயத் துறையில் ஏற்படுத்தி வரும் புரட்சியை விளக்கும் செயல்திட்டங்கள் தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்தில் நவீன இயந்திரங்களின் பயன்பாடுகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் - பாரம்பரிய தொழில்களையும் நவீன அறிவியலையும் இணைக்கும் திட்டங்கள் நாட்டின் பாரம்பரிய சின்னங்கள், பாதுகாப்பு சாதனங்கள், கடற்படை, விமானபடை, ராணுவ செயல்பாடுகள் இடம் பெற்றிருந்தன.
இதில் பள்ளியின் இயக்குநா் சிந்து ராஜன், துணை முதல்வா் தீபா மற்றும்ஆசிரியைகள் மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.