தைப்பூசம் மற்றும் வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் பிப். 1-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் பிப்.1-இல் விடுமுறை தினமாகும். அன்றைய நாளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், அதையொட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.