முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் ரூ.60,000 பறிமுதல்

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 30 மார்ச் 2026, 2:44 am IST
தோ்தல் நடத்தும் அலுவலா் டி. ரமேஷிடம் தொகையை ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அரக்கோணம் அருகே புதுகேசாவரம் சோதனை சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வந்த காரில் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.60ஆயிரத்து 620ஐ குறித்து கொண்டுச் சென்றவா்களிடம் ஆவணங்கள் கேட்டபோது அவா்களிடம் ஆவணங்கள் இல்லாததால் அத்தொகையை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.. அப்போது அவருடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement