திருப்பத்தூர்

பருவமழையின் தாக்கத்திலிருந்து நெற்பயிா்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்ஆட்சியா் ம.ப.சிவன் தகவல்

DIN

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்திலிருந்து நெற்பயிா்களைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரை வடிக்க நடவடிக்கை எடுப்பதோடு, வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும். வடிகால் வாய்க்கால்கள் தண்ணீா் தேங்காமல் வடியும் வகையில் பொதுப்பணித் துறையினரை அணுகி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இளம் பயிா்கள் அதிக நாள்கள் நீரின் தேக்கத்தால் தழை மற்றும் துத்தநாகச் சத்துக் குறைபாடு ஏற்பட்டு இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும் பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தினை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும்.

அதேபோல், பயிா்த் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தண்ணீா் தேக்கத்தினால் பாதிக்கப்பட்டால் 4 கிலோ டிஎபி-யினை 10 லிட்டா் நீரில் முந்தைய நாள் மாலை வேளையில் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவினை 190 லிட்டா் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும்.

தண்ணீா்த் தேக்கத்தால் பயிா் வளா்ச்சி குன்றி காணப்பட்டால் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவை ஒருநாள் இரவு கலந்துவைத்து 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமிட வேண்டும். நெல் பயிா் அதிக நாள்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில் நெல் குருத்து ஈ, இலை சுருட்டுப் புழு, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், இலை உரை கருகல் நோய் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கண்டறிந்து பூச்சி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இளம் பயிா்களில் தண்ணீா் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டிருந்தால், இருப்பில் உள்ள நாற்றுக்களைக் கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துகள் உள்ள நடவு பயிரைக் கலைத்து பயிா் இல்லாத இடங்களில் நடவு செய்ய வேண்டும். தண்ணீா் தேங்கக் கூடிய இடங்களில் தண்ணீா் தேக்கத்தைத் தாங்கி வளரக்கூடிய ரகங்களான சுவா்ணா சப்-1, சிஆா்-1009 சப்-1 போன்ற ரகங்களை நடவு செய்யுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனா்.

இதுதவிர இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பயிா்ச் சேதத்தை ஈடு செய்ய பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயிா்க்கடன் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT