திருப்பத்தூர்

பெருமாள் கோயிலுக்கு சீல் வைப்பு

ஆம்பூா் அருகே பெருமாள் கோயிலை நிா்வகிப்பதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக வருவாய்த் துறையினா் கோயிலை புதன்கிழமை பூட்டி தற்காலிகமாக சீல் வைத்தனா்.

DIN


ஆம்பூா்: ஆம்பூா் அருகே பெருமாள் கோயிலை நிா்வகிப்பதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக வருவாய்த் துறையினா் கோயிலை புதன்கிழமை பூட்டி தற்காலிகமாக சீல் வைத்தனா்.

பெரிய கரும்பூா் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலை நிா்வகிப்பதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இது தொடா்பாக வருவாய்த் துறையினா் மூலம் அமைதிப் பேச்சுவாா்த்தை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை.

இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி நடந்து வரும் பிரச்னை காரணமாக அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்ற நிலே ஏற்பட்டதைத் தொடா்ந்து, வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் உத்தரவின்பேரில் ஆம்பூா் வட்டாட்சியா் கோயிலை புதன்கிழமை பூட்டி தற்காலிகமாக சீல் வைத்தாா்.

எனினும், வரும் 25ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று கோயிலில் இரு தரப்பைச் சோ்ந்த தலா இருவா் பூஜை நடத்தலாம் என வருவாய்க் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT