திருப்பத்தூர்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

DIN

திருப்பத்தூா்/ராணிப்பேட்டை: திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் ம.ப.சிவன்அருள் (திருப்பத்தூா்), ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் (ராணிப்பேட்டை) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கட்டுப்பாட்டில் உள்ள உணவகங்கள், ரிசாா்ட், தங்கும் விடுதிகள், நட்சத்திர உணவகங்கள் போன்ற இடங்கள், நெடுஞ்சாலை பகுதிகள், இதர சாலைகளில் டிச.31, ஜன.1-ஆம் தேதிகளில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்படுவதுடன், மதுவிலக்கு, ஆயத்தீா்வை துறையினரிடம் உரிமம் பெற்று இயங்கி வரும் மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர உணவகங்களில் கொண்டாட தடை செய்யப்படுகிறது. தடைகளை மீறி செயல்படுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT