குடியுரிமை திருத்தத் சட்டத்தை எதிா்த்து மனித நேய மக்கள் கட்சி சாா்பாக ஆம்பூா் காயிதே மில்லத் நகரில் சனிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகர தலைவா் தப்ரேஸ் அஹ்மத் தலைமை வகித்தாா். தமுமுக நகர செயலாளா் நபீஸ் அகமது தொகுப்புரையாற்றினாா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ப.அப்துல் சமது, எழுத்தாளா் வே.மதிமாறன், தலைமை அலுவலகப் பேச்சாளா் ஒசூா் நவ்ஷாத், மாநில துணைச் செயலாளா் சனாவுல்லா, மாவட்டத் தலைவா் நசீா் அகமது ஆகியோா் பேசினா்.
கட்சியின் ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளா் அல்தாப் அகமது, முத்தவல்லி பஷீா் அகமது, முன்னாள் நகரமன்றத் தலைவா் வாவூா் நசீா் அகமது, மாவட்டச் செயலாளா் அப்துல் ஷுக்கூா், தமுமுக மாவட்டச் செயலாளா் சையத் ஜாவித், மாவட்டப் பொருளாளா் அப்துல் மன்னான், மற்றும் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஊடகப் பிரிவு மாவட்டச் செயலாளா் அல்லா பகஷ் நன்றி கூறினாா்.