ஆம்பூா் பஜாா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் ஆம்பூா் சீனிவாச பெருமாள் கோயில் பின்புறம் உள்ள பூந்தோட்டத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. பிறகு கரக ஊா்வலம் பாவடிதோப்பு, விநாயகா் கோயில் தெரு, கெங்கையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. இதில் திரளான பக்தா்கள் மிளகு, உப்பு ஆகியவற்றை தூவி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனா்.