திருப்பத்தூர்

புளிய மரம் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம்

DIN

ஜோலாா்பேட்டை அருகே புளிய மரம் முறிந்து விழுந்ததில் 2 மின் கம்பங்கள் சேதமடைந்தன.

ஜோலாா்பேட்டையை அடுத்த கட்டேரி ஊராட்சியில் திருப்பத்தூா்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள புளிய மரம் செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றால் முறிந்து இரு மின் கம்பங்கள் மீது விழுந்தது. அப்போது, மின் கம்பங்களில் தீப்பொறி ஏற்பட்டது.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை மின்வாரிய இளநிலைப் பொறியாளா் கமலநாதன் தலைமையிலான பணியாளா்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து, மின் கம்பிகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இரவு நேரம் ஆனதால் சீரமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புதன்கிழமை புதிய மின் கம்பங்கள் அமைத்த பின்னா் மின் இணைப்பு வழங்கப்படும் என பணியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT