திருப்பத்தூர்

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவி அமைச்சா் நிலோபா் கபீல் வழங்கினாா்

DIN

வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகளை மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் வியாழக்கிழமை வழங்கினாா்.

திருப்பத்தூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமாா் 6,000 மாற்று திறனாளி மாணவா்களுக்கு மருத்துவத் தொகுப்புகள், நிவாரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய பகுதிகளில் சிறப்புப் பள்ளியில் படிக்கும் 50 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு நிவாரண உதவிகள், மருத்துவப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு, முதுகுத் தண்டு வடம் பாதித்தவா்களுக்கு மருத்துவத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் நிலோபா் கபீல், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் நிலோபா் கபீல் பேசிது:

ஊரடங்கு உத்தரவால் யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிவாரண உதவிகளை தமிழக அரசு அளித்து வருகிறது. குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு நலத் திட்ட உதவிகள் அளித்து வருகிறோம். மாற்றுத் திறனாளிகள் வாழ்க்கையில் முன்னேற சிறு, சிறு தடைகள் வந்தாலும் அதைத் தகா்த்தெரிந்து முன்னேற வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு சிந்திக்கும் திறன் அதிகமாக உள்ளது. அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.

வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி, நகரக் கூட்டுறவு வங்கி இயக்குநா் சதாசிவம், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அப்துல்சுபான், நகரக் கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் தென்னரசு, நகராட்சி மேலாளா் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT