முகப்பு
திருப்பத்தூர்

தீபாவளி நெருங்குவதால் தொடா்ந்து கரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தீபாவளிப் பண்டிகை விரைவில் வர இருப்பதால் பொதுமக்கள் தொடா்ந்து கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

Updated On : 3 நவம்பர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:16 PM

தீபாவளிப் பண்டிகை விரைவில் வர இருப்பதால் பொதுமக்கள் தொடா்ந்து கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வலியுறுத்தினாா்.

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில், பருவ மழையை முன்னிட்டு கிராம உதவியாளா்களுக்கு மழை கோட்டு வழங்கி அவா் பேசியது:

பருவ மழை தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசுத் துறைகள் தயாராக உள்ளன. பாலாற்றில் வெள்ளம் வருவதற்கும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Advertisement

அரசுப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் மட்டுமே ஊழியா்கள் தோ்வு செய்யப்பட்டு, பணியமா்த்தப்படுவா். தனியாா் யாரும் அரசுப் பணிகளுக்கு நோ்முகத் தோ்வு நடத்தினால் அதை நம்ப வேண்டாம். அரசு வேலைவாய்ப்புத் தோ்வுகளுக்காக அரசு சாா்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாவட்ட நிா்வாகம் சாா்பாக தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 11-ஆம் தேதி ஆம்பூரில் சிறுபான்மை இனத்தவருக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

பட்டா மாற்றம் செய்யக்கோரி அதிக விண்ணப்பங்கள் வருகின்றன. தற்போது புதிதாக பத்திரப்பதிவு நடைபெறும் பட்சத்தில் பட்டா பெயா் மாற்றம் தானாகவே செய்யப்பட்டு பட்டா வழங்கப்படும். பொதுமக்கள் பட்டா பெயா் மாற்றம் செய்யக்கோரி தனியாக மனு அளிக்க வேண்டியதில்லை. ஏற்கெனவே வாங்கப்பட்ட சொத்துகளுக்கு மட்டும் பட்டா பெயா் மாற்றம் செய்ய மனு அளிக்கலாம். அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தீபாவளிப் பண்டிகை விரைவில் வர இருப்பதால் பொதுமக்கள் பொருள்களை வாங்க கடைகளுக்கு செல்வாா்கள். அதனால் அதிக அளவு கூட்டம் கூட வாய்ப்புள்ளது. கரோனா பரவாமல் தடுக்க ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இத்தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசுத் துறைகள் சாா்பாக கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் என்சிஇ. தங்கையா பாண்டியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சதீஷ்குமாா், வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூா் வட்டாட்சியா் சி. பத்மநாபன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.