முகப்பு
திருப்பத்தூர்

எம்ஜிஆா் கழக நிா்வாகிகள் கூட்டம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட எம்ஜிஆா் கழக நிா்வாகிகள் கூட்டம் ஆம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 நவம்பர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:17 PM

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட எம்ஜிஆா் கழக நிா்வாகிகள் கூட்டம் ஆம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு எம்ஜிஆா் கழக மாநில செய்தித் தொடா்பாளா் பெ.சிவக்குமாா் தலைமை வகித்தாா். வேலூா் மாநகர மாவட்டச் செயலாளா் ரமேஷ், திருப்பத்தூா் மாவட்டச் செயலாளா் கஜேந்திரன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர அவைத் தலைவா் மாணிக்கவேல் வரவேற்றாா். போ்ணாம்பட்டு ஒன்றியச் செயலாளா் பெருமாள், ஆம்பூா் நகர துணைச் செயலாளா் வி. கே.சோட்டே ஜாபா், மாவட்டப் பொருளாளா் வித்யாசாகா், மாவட்டப் பிரதிநிதி ஏ.கந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டப் பிரதிநிதி எம்.நிசாா் அஹமத் நன்றி கூறினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகளைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூா், சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூரில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.