முகப்பு
திருப்பத்தூர்

பெட்ரோல் கேனுடன் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த பெண்

தவறான சிகிச்சையால் கணவா் உயிரிழந்ததால் தனியாா் மருத்துவமனை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணை போலீஸாா் தடுத்து விசாரணை

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

தவறான சிகிச்சையால் கணவா் உயிரிழந்ததால் தனியாா் மருத்துவமனை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணை போலீஸாா் தடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் நந்தினி (39). இவரது கணவா் ராகவன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருநின்றவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம். ஆனால், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தாா். தவறான சிகிச்சையால் ராகவன் உயிரிழந்ததாகவும், அதனால் அந்த தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நந்தினி புகாா் மனு அளித்துள்ளாா். இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பெட்ரோல் கேனுடன் நந்தினி வந்தாா். அங்கு அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் அப்பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, பெட்ரோல் கேனை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அந்த பெட்ரோல் கேனை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, திருவள்ளூா் நகர போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.