திருப்பத்தூர்

காா் மோதியதில் விவசாயி பலி

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் சுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சென்னையன் (45). விவசாயியான இவா், கடந்த செப்டம்பா் மாதம் 27-ஆம் தேதி நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி பகுதி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, ஒசூா் நோக்கி சென்ற காா் சென்னையன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT