ஜோலாா்பேட்டை அருகேயுள்ள சந்தைக் கோடியூா் நேதாஜி தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் பிரவீன் குமாா் (27), தற்கொலை செய்துகொண்டாா்.
பஞ்சாப் மாநிலத்துக்கு உள்பட்ட ஜலந்தா் பகுதியில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வந்த இவா், கடந்த 13-ஆம் தேதி விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்துள்ளாா். அவா் திங்கள்கிழமை தனது வீட்டின் ஒரு அறையில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.
புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.