மணல் கடத்தல்: 2 போ் கைது
ஆம்பூா் அருகே பாலாற்றில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM
ஆம்பூா் அருகே பாலாற்றில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பகுதியில் பாலாற்று கரையோரம் மணல் கடத்துவதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரியவந்தது. மணல் கடத்திய கீழ்முருங்கை கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன், ரமேஷ் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.