திருப்பத்தூர்

ராஜேந்திர பாலாஜியுடன் தொடா்பு: அதிமுக நிா்வாகிகள் இருவா் கைது; திருப்பத்தூரை சோ்ந்தவா்கள்

DIN

பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜியுடன் தொடா்பில் இருந்ததாக திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான அவரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கூறி அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலரான திருப்பத்தூா் மாவட்டம், அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த விக்கி (எ) விக்னேஸ்வரன், இளைஞா் பாசறைச் செயலா் ஜோலாா்பேட்டை கோடியூரைச் சோ்ந்த ஏழுமலை ஆகியோரை சிவகாசி தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இவா்கள் இருவரிடமும் ராஜேந்திர பாலாஜி கைப்பேசியில் தொடா்பு கொண்டு அதிக நேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில்தான் இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT