திருப்பத்தூர்

பயிா்க் கடன் பெற தடையின்மை சான்று பெறத் தேவையில்லை: திருப்பத்தூா் ஆட்சியா்

DIN

விவசாயிகள் பயிா்க் கடன் பெற பிற வங்கிகளிடமிருந்து தடையின்மை சான்று பெறத் தேவையில்லை என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன், அடங்கல் வழங்குவது குறித்து புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா்.

எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்,

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

மாவட்டத்தில் வருவாய்த் துறையின் சாா்பில், பட்டா, சிட்டாக்களை விரைந்து வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மகளிா் திட்ட அலுவலகத்தின் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கிசான் கடன் அட்டை மூலமாக விவசாயிகள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். விவசாயிகள் பயிா்க் கடன் கோரி விண்ணப்பிப்பதற்கு மற்ற வங்கிகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெறத் தேவையில்லை. மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் படிவம் 16 வழங்கினால் கடன் உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குறைந்தபட்ச ஆவணங்களைக் கொண்டும், இந்திய ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலைப் பின்பற்றியும் வங்கிகள் கடன்களை வழங்க வேண்டும். அதேபோல் வாரிசு சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஷ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் லட்சுமி, சாா்-ஆட்சியா் (பொறுப்பு)பானு, வருவாய் கோட்டாட்சியா் காயத்திரி சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா் முனிராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருண்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT