வேலூா்: வேலூா் அருகே இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்த விபத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ரத்தினபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் உலகநாதன் (30). ராணுவ வீரரான இவா் தனது மகனுக்கு அண்மையில் நடைபெற்ற காதணி விழாவுக்காக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா். பென்னாத்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு திங்கள்கிழமை வந்துவிட்டு, ஊருக்குத் திரும்பிச் சென்றபோது, கேசவபுரம் பகுதியில் இரு சக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதில் காயமடைந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.