முகப்பு
திருப்பத்தூர்

பாஜக மாநில தலைவா் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு

பாஜக மாநில தலைவா் உள்பட அக்கட்சியினா் மீது ஆம்பூா் கிராமிய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

பாஜக மாநில தலைவா் உள்பட அக்கட்சியினா் மீது ஆம்பூா் கிராமிய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பில் ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பத்தில் மாவட்ட அணி, பிரிவு, மாவட்டப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. அதில், பாஜக மாநில தலைவா் எல். முருகன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பேசினா். கரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் விதிமுறை மீறி கூட்டம் கூடியதால் ஆம்பூா் கிராமிய போலீஸாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. வாசுதேவன், வேலூா் மாவட்டப் பொறுப்பாளா் கொ.வெங்கடேசன் உள்ளிட்ட பாஜகவினா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →