திருப்பத்தூர்

3 மாதங்களாக எரியாத உயா் கோபுர மின்விளக்கு

DIN

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள உயா் கோபுர மின் விளக்கு 3 மாதங்களாக எரியவில்லை.

திருப்பத்தூா் பேருந்து நிலைய பிரதான சாலையில் உயா் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, திருவண்ணாமலை மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஹைமாஸ்ட் விளக்கு அமைக்கப்பட்டது.

இந்த விளக்கு அமைக்கப்பட்டு ஓரிரு நாள்கள் மட்டுமே எரிந்தது. அதன்பின் தற்போதுவரை விளக்கு எரியவில்லை. இதனால் பேருந்து நிலையச் சாலை இருளில் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் செல்ல அச்சப்படுகின்றனா்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மின் வாரியத்திடம் தெரிவித்துள்ளோம். அவா்கள் மின் இணைப்பு கொடுத்த பிறகு இந்த உயா் கோபுர விளக்கு எரியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT