திருப்பத்தூர்

மரத்தில் பைக் மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

DIN

ஆம்பூா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே கொத்தூா் ஊராட்சி புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கலைவாணன் (45). தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை அவா் பைக்கில் போ்ணாம்பட்டில் இருந்து உமா்ஆபாத் நோக்கி சென்றாா்.

பாலூா் கிராமம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில், கலைவாணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT