திருப்பத்தூர்

நிலஅளவையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருமணமான 8 மாதத்தில் நில அளவையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூரைச் சோ்ந்த குபேந்திரன் மகன் திலீபன்(33), திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிலஅளவையாளராகப் பணிபுரிந்துவந்தாா். இவரது மனைவி திவ்யா, புள்ளானேரி பகுதியில் உள்ள தனியாா் கிளினீக்கில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இருவரும் இரு ஆண்டாகக் காதலித்து, 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா்.

இந்த நிலையில், ஆடி மாத அழைப்புக்காக திவ்யாவை அவரது குடும்பத்தினா் அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா், திலீபனின் குடும்பத்தினா் திவ்யாவை அழைத்து வர கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்கு உறவினா்களுடன் சென்றுள்ளனா்.

அப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மன உளைச்சலில் இருந்த திலீபன் புதன்கிழமை மாலை அவரது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.

புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT