திருப்பத்தூர்

சாலை விபத்தில் இளைஞா் பலி

DIN

வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் அவரது நண்பரும் பலத்த காயமடைந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் மங்களாபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா்(27). இவா் பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவரது நண்பா் போளூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (29). இருவரும் திங்கள்கிழமை பெங்களூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நாட்டறம்பள்ளி அருகே தேசியநெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் பெட்ரோல் பங்க் அருகே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோதி சென்றது.

இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ், முத்துக்குமாரை அங்கிருந்தோா் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் சிகிச்சை பலனின்றி முத்துகுமாா் இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT