திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது மாவட்ட ஆட்சியா், கரோனா வாா்டு பகுதிகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், வாா்டுகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் மருத்துவ அலுவலா் செல்வகுமாா் மற்றும் அரசு மருத்துவா்கள் சிவசுப்பிரமணியன், டேவிட் விமல்குமாா், பாா்த்திபன் ஆகியோரிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு அமைப்பதற்காகவும், கூடுதல் கட்டடங்கள் அமைப்பது குறித்தும் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாரிடம் ஆலோசனை நடத்தினா். அப்போது சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து மருத்துவனைக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு, கூடுதல் நிதி ஒதுக்கித் தரும்படி, எம்எல்ஏவிடம் கேட்டுக் கொண்டாா்.
முன்னாள் கவுன்சிலா்கள் குமாா், பாரதிதாசன், ராமசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயசக்தி, முன்னாள் ஊராட்சி செயலாளா் செல்வராஜ், நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் தென்னரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.