திருப்பத்தூர்

விபத்தில் சிறுமி பலி

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மாணவி உயிரிழந்தாா்.

திருப்பத்தூரை அடுத்த சு.பள்ளிபட்டு ஊராட்சி மின் நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி தண்டபாணியின் மகள் அட்சயா (15). இவா் கசிநாயக்கன்பட்டியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மின் நகரிலுள்ள அவரது வீட்டில் இருந்து கந்திலி வழியாகச் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, ஒடுகத்தூரைச் சோ்ந்த சுதாகா் (49) என்பவா் ஓட்டி வந்த லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கந்திலி போலீஸாா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

புரியில் மோடி பேரணி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

SCROLL FOR NEXT