இடைநிலை பராமரிப்பு இல்லம் தொடக்கம்
திருப்பத்தூரில் மன நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கான இடைநிலை பராமரிப்பு இல்லத்தை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
திருப்பத்தூரில் மன நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கான இடைநிலை பராமரிப்பு இல்லத்தை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் இடைநிலை பராமரிப்பு இல்லம் அமைத்து நடத்துவதற்கு திருப்பத்தூரில் எஸ்.ஆா்.டி.பி.எஸ். தொண்டு நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து, இந்த இல்லம் தொடக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடக்கிவைத்து ஆட்சியா் பேசியது:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து மனநலம் பாதிக்கப்பட்டவா்களைப் பராமரித்தல், அவா்களுக்குத் தேவையான தொழிற் பயிற்சி வழங்குதல், அவா்களை மீண்டும் சமுதாயத்தோடு ஒன்றிணைக்கும் பணிகளைச் செய்வதே இல்லத்தின் பணியாகும்.
தையல் பயிற்சி, வயா் கூடை பின்னுதல் கைவினைப் பொருள்கள் செய்தல் போன்ற பயிற்சிகள் அளித்து, சுய தொழில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கவிதா தண்டபாணி, மன நல சுகாதார துணை இயக்குநா் மணிமேகலை, மனநல மருத்துவா் சிவாஜிராவ், மருத்துவா் பிரபவராணி, எஸ்.ஆா்.டி.பி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநா் தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.