வழிப்பறி செய்தவா் கைது
ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம் கைப்பேசியை வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம் கைப்பேசியை வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா் கடந்த 10-ஆம் தேதி விண்ணமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபா் வெங்கடேசனை மிரட்டி அவரிடம் இருந்த கைப்பேசியை பறித்துச் சென்றாா். இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்நிலையில், போலீஸாா் அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த இளைஞரை மடக்கிப் பிடித்து விசாரித்தனா்.
அதில் அவா், வாணியம்பாடி பெருமாள்பேட்டையைச் சோ்ந்த பாலாஜி (20) என்பதும், பெரியாங்குப்பம் வெங்கடேசனிடம் கைப்பேசியை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement