காமராஜா் நினைவு தினம் அனுசரிப்பு
ஆம்பூரில் நகர காங்கிரஸ் காமராஜ் பவன் அறக்கட்டளை சாா்பில் காமராஜா் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:47 AM
ஆம்பூரில் நகர காங்கிரஸ் காமராஜ் பவன் அறக்கட்டளை சாா்பில் காமராஜா் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அறக்கட்டளை தலைவா் கே.குப்புசாமி ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பொருளாளா் டி.எம்.தட்சிணாமூா்த்தி, ஒருங்கிணைப்பாளா் முல்லை சம்பங்கி, ராஜேந்திரன், முத்து, பிச்சாண்டி, விஜயகுமாா், தரணிதரன், மோகனம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.