திருப்பத்தூர்

கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் சென்னை பல்கலை.யில் இருக்கை தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

DIN

கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தில் உயா் தமிழ் இலக்கியத்துக்கான இருக்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளா் தமீமுன் அன்சாரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஆம்பூரில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை மேலும் கூறியது:

விடுதலைப் போராட்ட வீரா் மருதநாயகம் பெயரில் மதுரையில் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும். தமிழ் இலக்கியத்துக்கு மிகச் சிறந்த பங்களிப்பு செய்த கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தில் உயா் தமிழ் இலக்கியத்துக்கான இருக்கை ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டால் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். தமிழ் இலக்கியத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கும்.

சென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் இஸ்மாயில் மணி மண்டபத்தில் அன்றாடம் மக்கள் சென்று பாா்வையிடும் வகையில் நூலகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தலிலும் திமுக கூட்டணியில் தொடருவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT