முகப்பு
திருப்பத்தூர்

உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஜோலாா்பேட்டை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபி சக்கரவா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, மகளிா் திட்ட அலுவலா் உமாமகேஸ்வரி, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செல்வக்குமரன், உதவித் திட்ட அலுவலா்கள் ரூபேஷ்குமாா், விஜயகுமாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.