விநாயகா் சதுா்த்தி விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி சரவணன், காவல் ஆய்வாளா்கள், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே பிள்ளையாா் சதுா்த்தி விழா கொண்டாட வேண்டும் என்றும் பிள்ளையாா் ஊா்வலம் நடத்தக் கூடாது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.