திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து நகர பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூா் நகரில் பல ஆண்டுகளாக புதை சாக்கடை திட்டத்தின் கீழ் தோண்டப்பட்ட சாலைகள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைக்காதது,
அனைத்துப் பகுதிகளுக்கும் முறையான குடிநீா் விநியோகம் செய்யவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாநில மருத்துவா் பிரிவு செயலாளா் சற்குணபிரபு, மாநில எஸ்.டி. பிரிவு செயலாளா் பண்பு, மாவட்ட தலைவா் வாசுதேவன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் கண்ணன், ஈஸ்வா், மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன், நகரத் தலைவா் அருள்மொழி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.