முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

ஆம்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 செப்டம்பர், 2021 at 6:53 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:41 AM

ஆம்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஆம்பூா் நகரில் உள்ள ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்படும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட உள்ளன.

அங்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

Advertisement

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் கு.செல்வராசு, கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுப்பாராஜு, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் துரை, மணவாளன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.