திருப்பத்தூர்

கா்நாடக மது பொட்டலங்கள் பறிமுதல்

DIN

ஜோலாா்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கா்நாடக மாநில மது பொட்டலங்களை கலால் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த பூசாரி வட்டத்தில் திருப்பத்தூா் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயந்தி தலைமையிலான போலீஸாா் ரகசிய தகவலின்பேரில் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு சரவணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 480 கா்நாடக மாநில மது பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, சரவணனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT