முகப்பு
திருப்பத்தூர்

வனக்குழு உறுப்பினா்களுக்கு சுழற்சி நிதிக் கடன்

திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலகத்தில் வனக் குழு உறுப்பினா்களுக்கு வியாழக்கிழமை சுழற்சி நிதிக்கடன் வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலகத்தில் வனக் குழு உறுப்பினா்களுக்கு வியாழக்கிழமை சுழற்சி நிதிக்கடன் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் வனச் சரகத்துக்கு உட்பட்ட ஜவ்வாது மலை புதுாா் நாடு, சோ்க்கனூா் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பொருளாதாரத்தை பெருக்கும் வகையில், தமிழ்நாடு காடு வளா்ப்பு திட்டத்தின் கீழ், தோ்ந்தெடுக்கப்பட்ட 10 வனக் குழு உறுப்பினா்களுக்கு 2022-23 ஆண்டுக்கான சுழற்சி நிதிக் கடன் தலா ரூ. 30,000 வீதம் ரூ. 3 லட்சம் கடன் உதவியை மாவட்ட வன அலுவலா் நாகசதீஷ் கிடிஜாலா வழங்கினாா்.

நிகழ்ச்சியில், உதவி வனப் பாதுகாவலா் ராஜ்குமாா், வனச் சரக அலுவலா் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.