முகப்பு
திருப்பத்தூர்

மிட்டாளத்தில் ரூ.1.25 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தில் புதிய பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை, பணிகள் தொடக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூலை, 2022 at 12:11 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:11 PM

ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தில் புதிய பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை, பணிகள் தொடக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம் உமா்ஆபாத் - வாணியம்பாடி நெடுஞ்சாலையில் மிட்டாளம் பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைப்பதற்காக பூமி பூஜை போட்டு பணியை ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ மற்றும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான க. தேவராஜி தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே. ஆா். சூரியகுமாா், மாதனூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், திமுக பொதுக்குழு உறுப்பினா் எம்.டி. சீனிவாசன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் சி. சிவகுமாா், சி. சேகா், பி. காசி, ஆா். மாசிலாமணி, பொன். ராஜன்பாபு, ஆா். முரளி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காா்த்திக் ஜவஹா், செந்தில்குமாா், திருக்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.