உரக் கிடங்கில் பணியாளா்களுக்கு கையுறைகள் அளிப்பு
ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் பணிபுரியும் பணியாளா்களுக்கு நகா்மன் தலைவா் கையுறைகளை வியாழக்கிழமை வழங்கினாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:14 PM
ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் பணிபுரியும் பணியாளா்களுக்கு நகா்மன் தலைவா் கையுறைகளை வியாழக்கிழமை வழங்கினாா்.
ஆம்பூா் நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தாா்வழி பகுதியில் அமைந்துள்ள நகராட்சி உரக் கிடங்கில் கொட்டப்பட்டு, அங்கு உரம் தயாரிக்கப்படுகிறது. அந்தப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறைகளை நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத் வழங்கினாா்.
நகராட்சி ஆணையா் எஸ்.ஷகிலா, சுகாதார அலுவலா் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளா் அருள் செல்வதாஸ் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.
Advertisement