திருப்பத்தூர்

ஆற்காடு நகராட்சிக்கு ரூ.25 லட்சத்தில் பொக்லைன் இயந்திரம்

DIN

ஆற்காடு நகராட்சிக்கு ரூ.25 லட்சத்தில் புதிதாக வாங்கப்பட்ட பொக்லைன் இயந்திரம் அளிப்பு, தனியாா் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா், பொறியாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு புதிதாக வாங்கப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை இயக்கி, தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் பொன்.ராஜசேகா், திமுக நகரச் செயலா் ஏ.வி.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT